Skip to main content

Posts

Showing posts from 2008

நான் ரசித்த கவிதைகள் /துணுக்குகள் சில

"பூபாளத்திற்கொரு புல்லாங்குழலில்"  வெ . இறையன்பு IAS காக்கா - கவிஞன் காகமே ! மயிலையும் குயிலையும் மணிக்கணக்காய் எத்தனையோ புலவர்கள் பாட அதிகமாய் பாடாத உன்னை நான் பாடுகிறேன் பறவைகளில் நீ கறுப்பு என்பதால் பாடாமல் விட்டார்களா ? குயில் கூட கறுப்புதான் ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு எனவே தான் பாடிவிட்டார்கள் போலும் . ஆகாயத் தோட்டியை அழுக்குகளை அப்புறப்படுத்தும் உன்னை எப்படியெல்லம் அவமானப்படுத்துகிறோம் ?. காக்காய்க் குளியலெனவும் காக்காய்ப் பிடிப்பதெனவும் காக்காய் வலிப்பதெனவும் காரணமில்லாமல் உன்னை வைகின்றனர் வையகத்தார் . குறும்புக்காரக் குயில்களுக்கு நீ தானே அடைகாக்கும் ஆதரவான செவிலித்தாய் அகத்தியன் கமன்டலத்தை அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால் காவிரி ஏது ? கல்லனை ஏது ?. கவிழ்த்ததே கவிழ்த்தாயே தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா ! எனச் சிலர் கவலைப்படுகிறார்கள் . கூடிவாழும் குணத்தை மனித்னுக்கு போதிக்க எத்தனை முறை முயன்றும் நீ ஏமாந்தே போனாய் . இனத்துக்குள் சண்டையிடும் இழிந்த